வவுனியாவில் சற்றுமுன் நால்வர் பலி; கழிவுக் குழியில் நடந்த சோகம்!

வவுனியாவில் நான்கு பேர் கழிவுக் குழி ஒன்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலேயே இந்த அனர்த்தம் இன்று மதியம் நிகழ்ந்துள்ளது.

கழிவுக் குழி ஒன்றைச் சுத்திகரித்த வவுனியா நகரசபை ஊழியர்கள் சிலரே இவ்வாறு பலியாலியுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்னர்.