அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து!

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பரவலாக தேவாலயங்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஜம்மியத்துல் உலமா குழுவினர் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கியுள்ளனர்.

அவர்கள் தெரிவித்ததாவது,

இஸ்லாமியர்கள் என்ற ரீதியில் நாங்கள் தீவிரவாதிகளின் உடல்களைக் கூட ஏற்கமாட்டோம். கிறிஸ்தவர்கள் வரும் ஞாயிறுக்கிழமை பிரார்த்தனைக்கு தேவாலயங்களுக்கு செல்லுங்கள் .

பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் கருதினால் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் வந்து உங்களுடன் நிற்கிறோம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.