முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

செம்மலை, விசுவமடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் சந்தேகநபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டனர்.

இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.