முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செம்மலை, விசுவமடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் சந்தேகநபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டனர்.
இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.