கொழும்பு பள்ளிவாசலுக்குள் பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்! தடுமாறும் படையினர்..

கொழும்பு கொம்பனித் தெருவில் பள்ளிவாசலுக்குள்ளிருந்து 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பள்ளி வீதி பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்தே வாள்கள் மீட்கப்பட்டன. பள்ளியின் மதகுருவின் படுக்கைக்கு கீழே வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் இராணுவ பயன்பாட்டிற்குரிய ஆடைகளும் மீட்கப்பட்டிருந்தன. மதகுரு தற்பொழுது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இச்சம்பவத்தால் படைத் தரப்பு செய்வதறியாது தடுமாறுவதாக கூறப்படுகிறது.