மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பின்புறமான பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44வயது) என்பவரின் சடலமே இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரின் மணிக்கூடு கோபுரத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டடத்தில், நகைத்தொழில் செய்து வந்தவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.