புகலிடம் கோரி சட்டவிரோதமாக ரியூனியன் தீவிற்கு சென்ற இலங்கையர்கள் பலர் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
60 பேர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இன்று காலை நாடுகடத்தப்பட்டுள்ளதாக AFP செய்தி சேவை கூறியுள்ளது.
மூன்று பெண்கள், மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 60 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து கடந்த 13ம் திகதி 120 பேர் கொண்ட குழுவினர் புகலிடம் கோரி ரியூனியன் தீவிற்கு சென்றிருந்தனர்.
மூன்று மீன்பிடி படகுகளில் இந்தோனேசிய ஆட்கடத்தல்கார்களின் உதவியுடன் இவர்கள் புகலிடம் கோரி ரியூனியன் தீவிற்கு சென்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.