சற்றுமுன்னர் அட்டாளைச்சேனை மீட்கப்பட்ட வெடிபொருட்கள்…தீவிர வேட்டையில் படையினர்

அட்டாளைச்சேனையில் சற்றுமுன்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்னப்பாலமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதால்அங்கு படையினர் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியை இப்போது படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்கு மீட்கப்பட்ட இந்த வெடிபொருட்களை ஆராய குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதியியை படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.