அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சி உறுப்பினரின் வீட்டில் திடீர் தீவிர சோதனை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினராக நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரும் நொச்சிமோட்டை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான அப்துல் ரசூக் முகம்மது லரீப் என்பவரின் பட்டக்காடு 2ஆம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் நேற்று காலை சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம், பட்டக்காடு பகுதி 2ஆம் ஒழுங்கையிலுள்ள நகரசபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சி உறுப்பினரின் வீட்டில் நேற்று சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிஸார் சல்லடை போட்டு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் எவ்விதமான சந்தேகத்திற்கிடமான பொருட்களையும் படையினர் கைப்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.