மனித வெடிகுண்டாக மாறிய தமிழ் பெண் புலேந்தினி மகேந்திரன்! தாய் கதறல்

“எனது மகளை காதல் வலையில் வீழ்த்தி, கடத்திச் சென்று, மதம் மாற்றி இறுதியில் மனித வெடிகுண்டாக மாற்றி அவளது உயிரையே பறித்துவிட்டனர்” என தற்கொலைதாரியான சாரா எனப்படும் புலஸ்தினியின் தாய் தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீர்கொழும்பு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் புலஸ்தினியும், அச்சி முகமது ஹஸ்தும் மனித வெடிகுண்டுகளாக மாறி வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலைப் படை தீவிரவாதிகளின் படங்களில் மட்டக்களப்பு – தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்த புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண்ணின் புகைப்படமும் உள்ளது.

இது தொடர்பில் புலஸ்தினியின் தாய் தெரிவிக்கையில்,

“புலஸ்தினி பள்ளி, கல்லூரி படிப்பில் முதலிடம் பிடித்து வந்தார். கல்லூரியில் படித்தபோது அச்சி முகமது ஹஸ்தும் என்பவர் எனது மகளை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் சென்றுவிட்டார்.

பின்னர் அவளை மதம் மாற்றம் செய்து சாரா என்று பெயர் சூட்டியுள்ளனர். கடைசியாக மனித வெடிகுண்டாக மாற்றி அவளது உயிரையே பறித்துவிட்டனர்” என கண்ணீருடன் கூறியுள்ளனர்.