நாவாந்துறை பள்ளிவாசலில் இருதரப்பு முறுகல்; எஸ்ரிஎப் வந்ததால் மோதல் தவிர்ப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை நாவலர் வீதியில் (காதர் அபூபக்கர் வீதி) உள்ள பச்சைப் பள்ளிவாசலில் நிர்வாகத் தெரிவில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் இன்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்ததால் முரண்பட்டுக் கொண்ட இரண்டு தரப்பினரும் கலைந்து சென்றனர். எனினும் குழப்பம் விளைவித்த இரண்டு தரப்பினரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் பள்ளிவாசலை முற்றுகையிட்டுள்ளனர்.

சிறிலங்கா தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்தோருக்கும் பள்ளிவாசலைச் சேர்ந்தோருக்கும்ஙிடையிலேயே இந்த முரண்பாடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

தற்போது (இரவு 10.45 மணி) யாழ்ப்பாணம் பொலிஸார. விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அங்கு குழப்பத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரையும் பள்ளிவாசலுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.