பள்ளிவாசலில் இருந்து மீட்கப்பட்ட வாள்கள் குறித்து உண்மையை வெளியிட்ட அசாத் சாலி! யார் அந்த நபர்?

அண்மையில் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 47 வாள்கள் அரசியல்வாதி ஒருவரினால் வைக்கப்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் சட்டத்திற்கு அமைய, கொள்கலன்களில் வாள்கள், இறக்குமதி செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வாள்களைக் கொண்டுவந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு பிரச்சினை ஏற்படும் என அறிந்துகொண்டு, அவற்றை பள்ளிவாசலில் வைத்துள்ளார்.

எனவே, அந்த 47 வாள்களைத் தவிர வேறு எங்கும் வாள்கள் கைப்பற்றப்படவில்லை என அசாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.