பல்வேறு பகுதிகளில் அப்பாவி முஸ்லீம் வீடுகள் மற்றும் அரபுக் கல்லூரி எரிப்பு

ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

நோன்புக் காலம் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேலும் சொல்லப்பட்டது.