சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்

நாட்டில் வன்முறைகளைத் தூண்டிவிட்டாரா? என்ற சந்தேகத்தில் மகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டார்.

2018ஆம் ஆண்டு மார்ச்சில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே, தூண்டி விடப்பட்டதாக அமித் ஜீவன் வீரசிங்க கைது செய்யப்பட்டு பல மாதங்களின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தென்னிலங்கையில் கடந்த இரண்டு தினங்கள் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து அங்கு வைத்து மகாசோஹோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரே அவரைக் கைது செய்தனர்.