ஆனையிறவு சோதனை சாவடியில் இருவர் திடீர் கைது

துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த இருவர் கிளிநொச்சி ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பயணிகளை சோதனை செய்த போது, ரவைகளை உடமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.