நாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

எந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பெற்றோருடன் இணைந்து நாளை பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர், முன்னாள் கல்வி அமைச்சர்கள் இருவர், பேராசிரியர் பந்துல குணவர்தன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கொழும்பு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரவித்துள்ளனர்

அதற்கமைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அனைவரும் நாளை பாடசாலைகளுக்கு செல்லவுள்ளனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்பினை பொலிஸார் மற்றும் படையினர் உறுதி செய்துள்ளனர். அதனை மேலும் உறுதி செய்வதற்காக இவ்வாறு எதிர்க்கட்சி தலையிடுவதனை பிரதமர் பாராட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி அனைவரையும் பாடசாலைக்கு வருமாறும் வழமை போன்று செயற்படுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.