சஹரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் தீவிரவாதி நாடாளுமன்றில்

நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு உறுப்பினர் பணியாற்றுவது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு ஆங்கில நாளிதழொன்று இந்த விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற பதிவேட்டுப் பிரிவில் பணியாற்றிய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினரான மொஹமட் நௌசட் ஜலால்தீனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போதே இந்த விடயம் தொடர்பாக தெரிய வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.