அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் மாபெரும் போராட்டம்.

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்யாழில் செயற்படும் பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் பொது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தும் அமைப்பின் அமைப்பாளர் சக்திவேல் பாதர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9-12 மணிவரை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுகொண்டார்.