திகன சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் இறுதி கிரியை! பெருமளவானவர்கள் பங்கேற்பு (வீடியோ)

கண்டி – திகன மற்றும் தெல்தெனியப் பகுதியில் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவரின் இறுதி கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

கண்டி மாவட்டத்தின் திகன பகுதியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது அப்துல் பாசித் என்ற இளைஞரொருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

இதன்போது தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தப்பிக்க முயன்ற போதே குறித்த இளைஞன் உயிரிழந்தார்.

இந்நிலையில், குறித்த இளைஞரின் இறுதி ஜனாஸா கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. இதில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.