சிவில் பாதுகாப்புத் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியை மாற்றம் செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருந்துவரும் சிவில் பாதுகாப்புத் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியை மாற்றம் செய்ய வேண்டாம் என கோரி ஆளுர் செயலகம் முன்பாக நேற்யதினம் (6) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் கலந்து கொண்டிருந்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே சந்தித்து கலந்துரையாடினார். அவர்களின் கோரிக்கைளை கேட்டறிந்து கொண்ட அவர் அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன். இராணுவத் தளபதியுடனும் தொலைபேசியில் உரையாடினார்.

குறித்த இராணுவ உயர் அதிகாரியின் மாற்றத்தினை காலம் தாழ்த்துமாறு விடுத்த வேண்டுகோளின் பேரில் அவரின் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.