முகமாலையில் இளவரசர் மிரெட் அல் ஹுசேன்

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தின் சிறப்பு தூதுவரான இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசேன் முகமாலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நான்கு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அவர் நேற்றுக்காலை முகமாலைக்குச் சென்று, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

அத்துடன் கண்ணிவெடிகளிகளால் பாதிக்கப்பட்ட சிலரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.