வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து தாக்கி கொள்ளை!! இன்று அதிகாலை கோப்பாயில் நடந்த பயங்கரம்!!

கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

வீட்டின் புகைக்கூடு வழியே உட்புகுந்த கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதிகளை கட்டி வைத்து தாக்கியதாகத் தெரியவருகின்றது. தங்களிடம் நகைகள் பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சுவரில் தொங்கியிருந்த புகைப்படங்கள் மற்றும் அல்பங்களை எடுத்துப் பார்த்து மூதாட்டி அணிந்திருந்த தாலிக் கொடி மற்றும் நகைளைக் கேட்டுத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையர்கள் வீட்டின் புகைக்கூடு வழியே உட்புகுந்ததுடன் வீட்டில் இருந்த வயோதிபத் தம்பதிகளை கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய பின் அறிந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியின் காதை அறுத்து தோட்டை எடுத்ததுடன் தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா அளவிலான பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கொள்ளை நடந்த பகுதிக்கு அண்மையிலும் சில மாதங்களுக்கு முன் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.