சிரிய மக்களுக்காக நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் ஆர்ப்பாட்டம்!

சிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து
ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்யவிருப்பதால் அனைத்து மக்களும்
அணிதிரண்டு கலந்துகொள்ளவேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் மனிதப்படுகொலையை உடன்
நிறுத்தக்கோரி ஐ.நா.வைக் கேட்கும் முகமாக, 2018.03.03ஆம் திகதி
முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் இக் கவனயீர்ப்புப் போராட்டமானது முள்ளிவாய்க்கால் பிரதான சந்திக்கு அருகில் நடைபெறவுள்ளதால் அனைவரையும் இந்த
மனிதாபிமானம் மிக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.