பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி பரிதாபமாக பலி

அவிஸ்ஸாவலை – தெய்யோவிட்ட பகுதியில் மாணவி ஒருவர் பாடசாலை மைதானத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தெய்யோவிட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே நேற்று மைதானத்தில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சிரட்டைகளைப் பயன்படுத்தி நடக்கும் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருந்த போதே மாணவி மயங்கி விழுந்துள்ளார்.தொடர்ந்து அவிஸ்ஸாவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 

உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.