மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவபாலன் – குணபாலன்

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இன்று முதல் தற்போதைய கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளரான சிவபாலன் – குணபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1976ல் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிறப்பிடமாகவும் புக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான சி.கெணபாலன் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் கலைமானிப் பட்டதாரியும் இலங்கை நிர்வாக சேவையில் 2004ம் ஆண்டு வவுனியா மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராக பணியேற்றேர்.

இதனைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் வட மாகாண உதவித் தொழில் ஆணையாளராகவும் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2016ம் ஆண்டு மார்ச் 03ம் திகதி வரையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்தார்.

2016ம் ஆண்டு மார்ச் 07ம் திகதி முதல் நேற்றுவரையில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து இன்று மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் நிரவாகமாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.