பலத்த பாதுகாப்பில் மஹிந்த!! சலூட் அடித்து வரவேற்ற இந்திய பொலிஸார்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகத்தான வரவேற்று வழங்கப்பட்டுள்ளது.திருப்பதியை சென்றடைந்த மஹிந்தவுக்கு அந்நாட்டு பொலிஸார் சலூட் அடித்து வரவேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படும் மஹிந்தவுக்கு அதியுச்ச மரியாதையை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன்மூலம் மஹிந்தவை இன்னும் ஜனாதிபதியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இந்தியாவுக்கு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய வெற்றியை அடுத்து, திருமதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் பெற்றுக்கொள்ள மஹிந்த சென்றுள்ளார்.

இதன்போது மஹிந்தவுக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தின் மீதி மஹிந்த தீவிர நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.