யாழில் இ.போ.ச சாரதி மீது தாக்கதல்

பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்க இலக்கான நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு 8 மணியளவில் பருத்தித்துறை கிராமக்கோட்டுச் சந்திப் பகுதியில் இத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அச்சுவேலி – புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர் ஆவர்.

வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம் வழிமறித்தவர்கயே தன் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் தனியார் சிற்றூர்தியினர் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.