நாடு கடத்தப்பட்ட பிரிகேடியருடன் விமான நிலையத்தில் செல்பி எடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஊழியர்கள்!!

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு கழுத்தை வெட்டுவேன் என கையால் சைகை காட்டிய பிரிகேடியர் பெர்னான்டோ பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியபோது சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

தமிழர்களுக்கு கழுத்தை வெட்டுவேன் என கைகாட்டிய அநாகரிக செயலை சிங்களதேசம் அங்கிகரிப்பதையே இந்த செல்பி புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது என கூறும் அவதானிகள் சிறிலங்கன் எயார்லைன்ஸை இலங்கை போக்குவரத்திற்கு பாவிக்கும் வெளிநாட்டு தமிழர்கள் சிறிலங்கன் எயார்லைன்ஸை புறக்கணிப்பார்களா? எனவும் மேலும் கேள்வியெழுப்புகின்றனர்.