யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சாரணிய நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு துருப்பு தலைவர் பா.கஜேந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினர் கௌரவிப்பு, சாரணர் சத்தி யப்பிரமாணம், வரவேற்பு நடனம், தலைமையுரையைத் தொடர்ந்து நூற்றாண்டு கீதம் வெளியீடு, நூல் வெளியீடு என்பன இடம்பெற்றன.
இவற்றைத் தொடர்ந்து நடனம், நாடகம், சான்றிதழ் வழங்கல், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகளும் உயிரிழந்த சாரணர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்ட ஆணையாளர் செ.தேவரஞ்சன், உதவி மாவட்ட திட்ட பணிப்பாளர் ந.கௌரிதாசன், மருத்துவர் சி.யமுனா னந்தா, கென் ரவர் குழும தலைவர், இலங்கை வங்கியின் இளநிலை நிறைவேற்று அதிகாரி ந.ஐங்கரநேசன், பெற்றோர்கள், அயல் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.