இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் திடீர் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் ஏனைய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.
மலையக பகுதிகளில் பனிமூடத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.