உங்கள் பெயர் P அல்லது R ல் ஆரம்பிக்கிறதா..? இதோ உங்களுக்கான சில சுவாரஸ்யத் தகவல்கள்

பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அதனை அவ்வளவாக சட்டை செய்யாது செல்பவர்களா நீங்கள்? இந்த தகவல் உங்கள் எண்ணத்தை மாற்றிடும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

ஆர் மற்றும் பி போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயருடையவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவர்கள் துலாம் ராசிக்காரர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் நேரடியாக இருக்குமென்பதால் எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவுகள் சூழவே இருப்பார்கள்.எல்லாரும் தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். சின்ன சின்ன தவறுகளுக்கு கூட அதிகம் வருந்துவர்.பிறரை ஈர்க்கும் தன்மை இவர்களிடத்தில் அதிகமுண்டு, அழகுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தங்களையும் தங்களைச் சுற்றியும் அழகாக வெளிப்படுத்த நிறைய மெனெக்கெடுவார்கள். கலை விஷயங்களில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமிருக்கும்.

உடல் நிலையில் அடிக்கடி எதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். சமூகத்துடன் எப்போதும் நெருக்கம் பாராட்டுவீர்கள்.சமூகத்தில் நடக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனக்கவலை கொள்வீர்கள். எந்த சின்ன விஷயத்திற்கு சட்டென உணர்சிவசப்படக்கூடியவராக இருப்பீர்கள்.

உங்களது மூளை அபாரமானதாக இருக்கும், மூளையின் செயல்பாடு வேகமாக இருக்கும். கணக்குப் புதிர்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களது இருப்பு அனைவராலும் விரும்பப்படும்.எல்லாவற்றிலும் நேர்த்தியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பீர்கள். எல்லாமே கச்சிதமாக, சொன்ன நேரத்தில் சொன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சட்டென கோபம் கொள்வதால் அடிக்கடி மனஸ்தாபங்கள் நிகழும்.

திருமண வாழ்க்கையில் அதீத இன்பம் வாய்க்காது. சண்டை சச்சரவுகளுடன் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.இயற்கை தொடர்பான விஷயங்களை அதிகம் நேசிப்பர். அதிக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.

வாக்குவாதங்களை தவிர்ப்பது இவர்களுக்கு நல்லது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, வாக்குவதாத்தின் அடிப்படையான சாதுர்யப் பேச்சு, மொழியறிவு இவர்களுக்கு சற்று குறைவு. அதோடு சட்டென அதிகமாக உணர்சிவசப்படுபவர்கள் என்பதால் அதனைத் தவிர்ப்பது நல்லது.

அவ்வளவு எளிதாக தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்து விட மாட்டார்கள். தோற்கும் போதெல்லாம் இன்னும் ஒரு முறை முயற்சித்து பார்க்கலாமா என்பது தான் இவர்களது அடுத்த கேள்வியாக இருக்கும்.