பட்டம் ஏற்றிய மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஜெயகுமாரன் தீசன் என தெரியவந்துள்ளது. பட்டம் ஏற்றிக்கொண்டு பின்பக்கமாக ஒடிய போதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.