யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டரை கிலோ கோட்டைக்ஸ் எனும் வெடிமருந்துடன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக இரும்பு சேகரித்து விற்கும் தொழிலைச் செய்து வரும் 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணிடமிருந்து 2 ஆயிரம் ரூபா பெறுமதியான மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் கோட்டைக்ஸ் எனும் வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.