அரசியல் நெருக்கடிக்குள் நாடு! மனைவியுடன் மைதானத்தில் மஹிந்த

பல்வேறு அரசியல் மோதல்கள், வாதவிவாதங்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு தற்போது நாடு முகங்கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இவை எதையும் கணக்கில் கொள்ளாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் தமது புதல்வர்களின் றக்பி விளையாட்டு போட்டியை காண மைதானத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த றக்பி போட்டி நேற்று கொழும்பு குதிரை பந்தய திடலில் நடைபெற்றது. சீ.எச்.எச் மற்றும் சீ.ஆர் ஆகிய அணிகள் போட்டியில் இதில் மோதின.

இலங்கையின் பழைய றக்பி போட்டிகளில் ஒன்றாக க்ளிப்பர்ட் கிண்ண போட்டியில் சீ.எச் மற்றும் எப்.சி. அணிக்கு மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தலைமை தாங்குகின்றார்.

யோஷித ராஜபக்ச சீ.எச். அணிக்கு விளையாடி வருவதுடன் இந்த அணிக்கு ஆலோசகராக நாமல் ராஜபக்ச பணியாற்றி வருகின்றார்.

குதிரை பந்தய திடலில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹித்த ராஜபக்ச தலைமையிலான அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.