அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவர் காலமானார்!

அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவர் காலமானார்!

சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவருமான கந்தையா நீலகண்டன் இன்று கொழும்பில் காலமானார்.

சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 70வது வயதில் உயிரிழந்துள்ளார்.

சட்டத்தரணியான அவர், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவராகவும், கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.