கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் (படங்கள் , வீடியோ)

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக கோப்பாய் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பில் குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது

யாழ் நாவற்குளி பகுதியைச்சேர்ந்த இருபது தொடக்கம் இருபத்துமூன்று வயதுகளையுடைய குறித்த மூவரும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்

இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பதினைந்து பவுண் உருமாற்றப்பட்ட பவுண் கட்டிகள் இரண்டு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்

அத்துடன் குறித்த கொள்ளைக்கும்பலின் திருட்டு நகைகளைப் பெற்று அதை உரு மாற்றும் வேலை செய்துவந்த கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்

இவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்