மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ள கையொழுத்து போராட்டம்

இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்த வலிறுயுத்தி மக்கள் மத்தியில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இரண்டு வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின்போது வழங்கப்பட்டது.
மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ள கையொழுத்து போராட்டம்