முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியலை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைதுள்ளனர்.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் இலங்கை மின்சார சபையினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அதில் மக்கள் கட்ட வேண்டிய மொத்த தொகையாக 22 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான பணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட வேண்டிய மின் கட்டணப் பட்டியலை மின்சார சபை 15 மாதங்கள் கழித்து இன்று வழங்கியுள்ளது.
இதனால் மொத்த தொகையை செலுத்துவதில் பொதுமக்கள் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ளனர்.
இதேவேளை நாளாந்த கூலித்தொழிலை நம்பி வாழும் ஏழைகளின் வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியலிலுள்ள மொத்த தொகையினை கட்டம் கட்டமாக செலுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழிவகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.