கொழும்பில் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இராணுவ அதிகாரி

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோ எடுத்த குற்றச்சாட்டுக்காக இராணுவ அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின் கப்டன் தர அதிகாரியான ஜே.எம்.ஏ.கே. ஜயவர்தன என்பவரே இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இராணுவ தலைமையகம் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க விசாரணைக்காக முன்னிலையானபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத செய்யப்பட்ட நபர் கல்லடி, மன்னார் இராணுவ முகாமுக்கு உட்பட்டு சேவையில் இருப்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தாதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து மது, கஞ்சா சுருட்டு போன்றவற்றை உபயோகிக்கச் செய்து அவரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் மூவரைத் தேடி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் இராணுவ கப்டன் தர வைத்தியர் ஒருவர், லான்ஸ் கோப்ரல் தர சாரதி, தகவல் தொழில் நுட்ப பொறியியலாளர் என மூவரை நாரஹேன்பிட்டி பொலிஸார் முன்னதாகவே கைது செய்துள்ள நிலையில் அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளனர்.