நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாரினால் குறித்த சடலம் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் ராஜபக்ச முதியன்சலாகே குசுமாவத்தி (79) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.