நீச்சல் தடாகத்தில் விழுந்த வெளிநாட்டுப் பெண் மரணம்

கொஸ்கொடை இந்துருவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் பிற்பகல் 3.30 அளவில் தடாகத்தில் நிராடிக்கொண்டிருந்தார்.

தடாகத்தில் இருந்து வெளியே வந்த அவர், வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளார். இதனையடுத்து விடுதி நிர்வாகிகள், பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மரண விசாரணைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீச்சல் தடாகத்தில் விழுந்த வெளிநாட்டுப் பெண் மரணம்