மஹிந்தவின் கட்சியால் இளம் யுவதிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாநகர சபை ஒன்றுக்காக இளம் யுவதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட்ட சசினி காரியவசம் என்ற இளம் யுவதியே வெற்றி பெற்று மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளார்.

கடந்த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய சசினி காரியவசம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், அனுராதபுரம் மாநகர சபையின் இலக்கம் 14 சிரிமேவன் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.