நந்திக் கடலில் மோதல்!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நந்திக்கடல் வாவியில் தொடர்ச்சியாக சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அப்பகுதி மீனவர்கள் இன்று இரவு நந்திக்கடல் வாவிக்கு படையெடுத்துள்ளனர்.

இதன்போது, சட்டவிரோத தொழிலாளர்களுக்கும் மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.