மகிந்தவுடன் இணையும் தொண்டா?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை பெற சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி. ரத்நாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை உள்ளிட்ட பிரதேச சபைகளை ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றிக் கொண்டுள்ளது.

எனினும், அங்குள்ள சில பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அவ்வாறான இடங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஆதரவுக் கட்சியான பொதுஜன பெரமுணவின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைப் பிடித்துக் கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணக்கம் தெரிவித்துள்ளது.

மகிந்தவுடன் இணையும் தொண்டா?