உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வழியாக நாடு பாரிய மாற்றமொன்றை எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ள பதிவில் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், பொதுமக்கள் அரசாங்கத்தில் மாற்றமொன்றை எதிர்பார்த்தே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது ஜன பெரமுனவுக்கு வாக்களித்துள்ளார்கள்.
எமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், மாற்றத்தை விரும்பும் பொதுமக்களின் குரல்களை தான் தெளிவாக செவிமடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.