உள்ளூராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுடன் ஆரம்பமாகவுள்ள கூட்டம்

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் என்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இது விடயம் தொடர்பான வர்த்தனமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னர் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட பெண்களைவிட இந்த முறை போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.