தேர்தல் முடிவின் எதிரொலி! பதவி விலகுகிறார் ரணில்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ராகீத ராஜபக்ச முகநூலில் பதிவிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

உத்தியோகப்பற்றற்ற வகையிலான தகவல் கிடைத்துள்ளது என பிரதமர் பதவி விலகுகின்றார் என ராகீத ராஜபக்ச பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்தக் கருத்தால் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.