அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம்! ஜனாதிபதி அதிரடி

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

“தெளிவான மாற்றம் ஒன்றை நாட்டில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைவாகவே அந்த மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.