சுசில் பிரேம ஜயந்த மஹிந்தவிடம் சரணாகதி?

அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களில் ஒருவரான சுசில் பிரேம ஜயந்த மஹிந்த அணியுடன் இணைந்து கொள்ள தூது அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த, மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவி மைத்திரியின் உத்தரவுக்கு இணங்க சுசில் பிரேம ஜயந்தவிடமிருந்து பிடுங்கப்பட்டது. மைத்திரியின் நெருங்கிய சகாவான மஹிந்த அமரவீரவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக பொறுமிக் கொண்டிருந்த சுசில் பிரேம ஜயந்த பல தடவைகள் தன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய முன்வந்த நிலையில் மைத்திரி அவரை ஆசுவாசப்படுத்தி சமாதானம் செய்திருந்தார்.

எனினும் உள்ளூராட்சி சபைகளில் மஹிந்த ஆதரவு அணியான பொதுஜன பெரமுணவின் பாரிய வெற்றி காரணமாக தற்போது சுசில் பிரேம ஜயந்த மஹிந்த அணியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார். அவருடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் அரசாங்கத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளத் தலைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.