வெளிவரும் தேர்தல் முடிவுகளால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பேரிடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தற்போதைய முடிவுகளின் படி மஹிந்த அணியான பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இறுதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் சு.க. உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.