நெடுந்தீவில் ஈ.பி.டி.பி ஆதிக்கம்!! அனலைதீவும் பறிபோகின்றது……!

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வட்டாரத்தில் முன்னிலையாகவுள்ளது.

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அனலை தீவுப் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிலையில் உள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 293 வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 142 வாக்குகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 26 வாக்குகள்